வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் சரிவு கண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 168 புள்ளிகள் வீழ்ச்சி..

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 168 புள்ளிகள் குறைந்தது.

எச்.டி.எஃப்.சி. வங்கியின் கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதது, கச்சா எண்ணெய் விலை உயர்வு, அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டெக் மகிந்திரா மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஆக்சிஸ் வங்கி மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,687 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,911 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 180 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.280.68 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.48 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 168.21 புள்ளிகள் குறைந்து 60,092.97 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 61.75 புள்ளிகள் சரிவு கண்டு 17,894.85 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment