இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகல் …

by Lifestyle Editor

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவதாக டி20 தொடர் நடைபெற்ற நிலையில் இதில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. டி20 போட்டி தொடரைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நடக்கிறது. ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. காயம் குணமடைந்ததால் அவர் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், தேசிய கிரிக்கெட் அகாடமி ஊழியர்களின் பரிந்துரையின் பேரில் பும்ரா தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் உலகக் கோப்பை ஆகியவற்றை கருத்தில் இந்த அதிரடியான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment