ஜாஸ்மின், சூர்யா கல்யாணத்தில் வந்த தடங்கல் – மாரி சீரியல் அப்டேட் .!

by Lifestyle Editor

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் தாரா சூர்யாவிற்கு ஜாஸ்மினை திருமணம் செய்ய சொல்லி ரிஜிஸ்டர் ஆபீஸ் அழைத்துச் செல்ல அங்கு கரண்ட் கட் ஆகிறது. கரண்ட் கட்டான உடன் ரிஜிஸ்டர் ஆபீஸ் இருட்டில் திருமணம் வேண்டாம் நாளைக்கு திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்ல ஜாஸ்மின் மனசு தான் முக்கியம் பகலோ இரவு முக்கியம் இல்ல அதனால பரவால்ல நான் இப்பவே இருட்டுல திருமணத்துக்கு சம்பதிக்கிறேன் என்று சொல்ல கையெழுத்து போட போக அப்போது பாம்பு வருகிறது.

பாம்பை பார்த்ததும் அனைவரும் அடித்து பிடித்து வெளியே ஓடி வருகிறார்கள். பாம்பு பிடிப்பவனை அழைத்து வந்து பார்க்க அங்கு பாம்பு இல்லாமல் இருக்க சரி இருட்டில் பிடிக்க முடியாது நாளை காலையில் வெளிச்சம் வந்தவுடன் நான் பாம்பை பிடிக்கிறேன் என்று அவன் சென்று விட சங்கர பாண்டி ரிஜிஸ்டர் புக்கை எடுத்துட்டு வர உள்ள செல்ல அங்கு ரிஜிஸ்டர் புக் மேல் பாம்பு இருக்கிறது.

இதனால் சங்கரபாண்டி வெளியே ஓடிவந்து விஷியத்தை சொல்ல ரெஜிஸ்டர் ஆபீஸர் இன்னிக்கு கல்யாணம் வேண்டாம் நாம நாளைக்கே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்ல தாராவும் ஜாஸ்மினும் பிடிவாதமா இன்று கல்யாணத்தை நடத்தி ஆகணும்.

டேபிள் எல்லாத்தையும் எடுத்து வெளியில போடுங்க வெளியே போட்டு இங்கே திருமணத்தை நடத்தலாம் என்று சொல்ல அதற்கு ரிஜிஸ்டர் சம்மதிக்கிறார்.

அடுத்து ஜாஸ்மின், சூர்யா, தாரா என அனைவரும் காத்திருக்க மீண்டும் சூர்யா தயக்கத்துடன் இருக்க தாரா சம்மதிக்க வைக்க அவன் கையெழுத்து போட போகும் நேரத்தில் காத்து பலமா அடித்து பேப்பர் எல்லாம் பறந்து செல்கிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Related Posts

Leave a Comment