தொடர்ந்து 3வது நாளாக சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 241 புள்ளிகள் வீழ்ச்சி..

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 241 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும், கொரோனா தொற்றுநோய் இன்னும் முடியவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தது பங்குச் சந்தைகளில் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் இன்போசிஸ் உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மகிந்திரா அண்ட் மகிந்திரா மற்றும் பஜாஜ் பின்சர்வ் உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 767 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,787 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 98 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.280.48 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.2.43 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 241.02 புள்ளிகள் குறைந்து 60,826.22 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 71.75 புள்ளிகள் சரிவு கண்டு 18,127.35 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment