சென்செக்ஸ் 104 புள்ளிகள் வீழ்ச்சி..

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 104 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என்ற பயம், சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது போன்ற எதிர்மறையான சர்வதேச நிலவரங்களால் பங்கு சந்தைகளில் வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டி.சி.எஸ். மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா மோட்டார்ஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,673 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,850 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 134 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.287.45 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.46 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 103.90 புள்ளிகள் குறைந்து 61,702.29 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 35.15 புள்ளிகள் சரிவு கண்டு 18,385.30 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment