சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து ..

by Lifestyle Editor

உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த கால்பந்து உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இன்று கத்தாரில் நடைபெற்றது.இதில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா அணியின் கையே வாங்கியது.தனக்கு கிடைத்த பெனால்டி வாய்பை பயன்படுத்திய மெஸ்ஸி கோலாக மாற்றி 1 – 0 முன்னிலைப்படுத்தினார். ஆட்டத்தின் 36 வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஏடி மரியா மற்றொரு கோல அடிக்க அர்ஜென்டினா அணி வெற்றியை நோக்கி பயணித்தது. ஆட்டம் ஏறக்குறைய அர்ஜென்டினா அணியிடம் சென்ற போது பிரான்சின் கிளியன் எம்ப்பாவே 80 மற்றும் 81வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். ஆட்டம் இரண்டுக்கு 2 – 20 என சமனில் முடிய , கூடுதல் நேரத்தில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி 108 வது இடத்தில் ஒரு கோல் அடித்தார். பதிலுக்கு பிரான்சின் கிளியன் எம்ப்பாவே 117வது நிமிடத்தில் மீண்டும் ஒருமுறை கோல் அடித்து ஆட்டத்தை சமனியில் முடித்தார். கூடுதல் நேரத்திலும் சமநிலை முடிந்ததால் ஆட்டம் பெனால்டி சூட் முறைக்கு சென்றது.

இதில் பிரான்ஸ் 5 முறையில் 3 முறை மட்டுமே கோல் அடித்தது. ஆனால் அர்ஜென்டினா தன்னுடைய முதல் நான்கு வாய்ப்புகளையும் கோலாக்கி உலக கோப்பையை தனதாக்கிக் கொண்டது. நீண்ட காலமாக உலக கோப்பையை வெல்லாமல் இருந்த அர்ஜென்டினாக்கு மெஸ்ஸி உலக கோப்பையை வாங்கி கொடுத்து தனது நீண்ட நாள் ஆசையையும் நிறைவேற்றினார். 1986 ஆம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி மகுடம் சூடிய நிலையில் மெஸ்சியும் தனது அதிரடி மேஜிக் மூலம் மீண்டும் உலக கோப்பையை தங்கள் வசப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தப் போட்டி மிகவும் பரபரப்பான கால்பந்து போட்டிகளில் ஒன்றாக நினைவுகூரப்படும். உலக கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினாவுக்கு வாழ்த்துகள்! இந்த கால்பந்து தொடர் முழுவதும் அவர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸியின் மில்லியன் கணக்கான இந்திய ரசிகர்கள் இந்த அற்புதமான வெற்றியில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்! என பதிவிட்டுள்ளார். மேலும் அவர், உலக கோப்பை கால்பந்து போட்டியில் உற்சாகமான செயல்திறனுக்காக பிரான்சுக்கு வாழ்த்துகள்! அவர்கள் இறுதிப் போட்டியில் தங்கள் திறன் மற்றும் விளையாட்டுத் திறமையால் கால்பந்து ரசிகர்களை மகிழ்வித்தனர் என பிரான்சு அணிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேபோல், உலக கோப்பை வென்ற அர்ஜென்டினா அணிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தற்பொதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment