சென்செக்ஸ் 403 புள்ளிகள் உயர்வு ..

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்ததகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 403 புள்ளிகள் அதிகரித்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. கடந்த பத்து மாதங்களில் முதல் முறையாக நவம்பரில் சில்லரை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் உச்ச வரம்பை காட்டிலும் குறைந்திருப்பது பங்கு வர்த்தகத்தின் ஏற்றத்துக்கு வழிவகுத்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாக்டர்ரெட்டீஸ், இந்துஸ்தான் யூனிலீவர், டைட்டன், மாருதி சுசுகி, டாடா ஸ்டீல் மற்றும் நெஸ்லே இந்தியா ஆகிய 6 நிறுவன பங்குகளை தவிர்த்து மற்ற 24 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,925 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,599 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 145 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.290.00 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.1.54 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 402.73 புள்ளிகள் உயர்ந்து 62,533.30 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 110.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,608.00 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment