ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா – டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சு

by Lifestyle Editor

இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் முதலாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்திலும் வங்காளதேச அணி ‘திரில்’ வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இன்று நடக்கிறது. ஏற்கனவே தொடரை இழந்துள்ள இந்திய அணி இன்றைய போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியாவது பெறுமா என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகியோர் போட்டியில் இருந்து விலகி உள்ளனர். இந்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இந்தபோட்டியில் காயமடைந்த கேப்டன் ரோகித், தீபக் சகாருக்கு பதிலாக இஷன் கிஷன், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியை ராகுல் வழிநடத்துகிறார்.

Related Posts

Leave a Comment