புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் ..

by Lifestyle Editor

சென்னை அருகே சோழிங்கநல்லூர் மண்டலம், பெருங்குடி மண்டலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் கரையை கடந்த நேரத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சென்னையில் பெய்த கனமழையினால் சென்னை அண்ணா சாலை , திருவல்லிக்கேணி, குரோம்பேட்டை, வடபழனி பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் போல் நீர் தேங்கி இருக்கிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். சென்னை புறநகர் பகுதிகளில் மழையினால் இருள் சூழ்ந்திருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிவாரண முகாம்களில் 3,600 பேர் தங்கவைப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-194க்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 500 உணவுப் பொட்டலங்கள் மற்றும் அரிசி போன்ற மளிகைப் பொருட்களை வழங்கினார். இதேபோல் பெருங்குடி மண்டலம், வார்டு-181க்குட்பட்ட குப்பம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் அரிசி போன்ற மளிகைப் பொருட்களை வழங்கினார்.

Related Posts

Leave a Comment