ஓடும் 108 ஆம்பலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை – பிரசவ வலியால் துடிதுடித்த மலைவாழ்பெண்

by Column Editor

குன்றி மலை பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள குன்றி மலை கிராமத்தைச் சேர்ந்தவர் மசனன். இவரின் மனைவி லில்லி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், லில்லிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக கடம்பூரிலிருந்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அரப்புலிசாமி, மருத்துவ உதவியாளர் விஜய் ஆகியோர் கர்ப்பிணி லில்லியை ஏற்றிக்கொண்டு கடம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அப்போது, கடம்பூர் அருகே மலை பாதையிலேயே லில்லிக்கு வலி அதிகமானது.

இதனையடுத்து, ஆம்புலன்ஸிலேயே லில்லிக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இதில், லில்லிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, குழந்தையுடன் லில்லியை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் தாயையும், சேயையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். யானைகள் நடமாட்டம் உள்ள மலைப்பாதையில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் விஜய், ஓட்டுநர் அரப்புலிசாமி ஆகியோரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment