முகத்தில் உள்ள சுருக்கம் மறைய இதை செய்தால் போதும் ..

by Lifestyle Editor

வயதானவர்களுக்கு முகத்தில் சுருக்கம் வருவது இயல்பானது என்றாலும் நடுத்தர வயதினர் சிலருக்கு முகத்தில் சுருக்கம் வரும் என்பதை பார்த்திருக்கிறோம்.

அந்த வகையில் சருமத்தில் உண்டாகும் சுருக்கம் மற்றும் நிற மாற்றம் ஆகியவற்றுக்கும் ஜாதிக்காய் ஒரு நல்ல மருந்து என்று கூறப்படுகிறது.

சருமம் மற்றும் கூந்தலுக்கு ஜாதிக்காய் சிறந்த நன்மைகளை தருவதாகவும் எனவே இதனை பயன்படுத்தினால் சருமம் அழகாகவும் தெளிவாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள ஜாதிக்காய் உதவுகிறது என்றும் சோர்வடையாமல் தடுக்கிறது என்றும் அதன் காரணமாக முக சுருக்கங்களை தவிர்க்க உதவுகிறது என்றும் கூறப்படுகிறது.

பால் அல்லது தேங்காய் பால் ஆகியவற்றில் ஜாதிக்காயை தூள் செய்து நன்றாக கலந்து முகத்தில் தடவினால் சருமம் அழகாகவும் பொலிவாகவும் இருக்குமென்றும் சருமம் எந்த காலத்திலும் சுருங்காமல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment