ரூ.40 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை ..

by Lifestyle Editor

சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 40 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டிருப்பது நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்றைய தினம் சவரனுக்கு ரூ. 152 உயர்ந்து சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4,955க்கும், ஒரு சவரன் ரூ. 39,640க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று அதிகரித்து 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அந்த வகையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 440 அதிகரித்து, ஒரு சவரன் 40,0 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் ஒரு கிராமுக்கு ரூ. 55 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,010 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 70. 50 காசுகளாக விற்பனையாகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளி 700 ரூபாய் உயர்ந்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 152 ரூபாய் மட்டுமே உயர்ந்த நிலையில், இன்று அதிரடியாக ரூ. 440 உயர்ந்திருப்பது நகைப் பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Related Posts

Leave a Comment