இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு ஹேமங் பதானி விண்ணப்பம் ..

by Lifestyle Editor

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கான போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதில் இந்திய அணி அரையிறுதி போட்டியுடன் வெளியேறியது. இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது இந்திய அணி. இந்திய அணி தைரியமின்றி தயக்கத்துடன் விளையாடியதே காரணம் என முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்தனர். இதன் எதிரொலியாக சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவை பிசிசிஐ அதிரடியாக நீக்கியது. மேலும் புதிய தேர்வு குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பிசிசிஐ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஜெய் ஷா அறிவித்தார். புதிய தேர்வு குழு தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 7 டெஸ்ட் போட்டிகள் அல்லது குறைந்தபட்சம் 30 முதல் வகுப்பு போட்டிகள் விளையாடி இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 10 ஒருநாள் போட்டி 20 முதல் தர போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். கிரிக்கெட்டில் இருந்து 5 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்று இருக்க வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது .

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கான போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹேமங் பதானி ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியில் பயிற்சியாளர் குழுவில் அங்கம் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் சேர்ந்து நயன் மோங்கியா, மணிந்தர் சிங், ஷிவ் சுந்தர் தாஸ், அஜய் ரத்ரா உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

Related Posts

Leave a Comment