உலகக் கிண்ணத்தை வெல்ல பிரேசில், பிரான்சுக்கு அதிக வாய்ப்பு – மெஸ்சி கணிப்பு

by Lankan Editor

ஆடவருக்கான 22 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி கட்டாரில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த கால்பந்து தொடரில் நடப்பு சம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் பங்கேற்கின்றன.

8 பிரிவாக இடம்பெறும் இந்த தொடரின் முதல்போட்டியில் கட்டார் மற்றும் ஈகுவடார் அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் குறித்த தொடரை பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் வெல்வதற்கு வாய்ப்பு அதிகமிருப்பதாக அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி கூறியுள்ளார்.

சி பிரிவில் அங்கம் வகிக்கும் அர்ஜென்டினா அணி, 22 ஆம் திகதி நடைபெறவுள்ள தனது முதல் போட்டியில் சவுதி அரேபியாவை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment