தொடரை கைப்பற்றுமா இந்தியா? – இன்று நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டி

by Lifestyle Editor

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி, மவுண்ட் மாங்கனுயி நகரில் கடந்த 20ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 111 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நேபியரில் இந்திய நேரப்படி நண்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் அந்த போட்டி கணக்கில் வராது. ஆகையால் நாளைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும். இதேபோல் நாளைய போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் தொடர் சமினில் முடியும். இதேபோல் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலும் இந்தியா தொடரை கைப்பற்றும். இந்த போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ள நிலையில், அவருக்கு பதிலாக மார்க் சாப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மூத்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அணியை வழிநடத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment