ஐபிஎல் விலைபோகாத சுரேஷ் ரெய்னாவுக்கு ஸ்போர்ட் ஐகான் விருது – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

by Lifestyle Editor

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா பல ஆட்டங்களில் விளையாடி இந்திய அணி வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே 5 ஆயிரம் ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்திருந்தார்.

ஆனால், ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்த அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

ரெய்னாவுக்கு உயரிய விருது

இதனிடையில், நடப்பாண்டிற்கான மாலத்தீவுகள் ஸ்போர்ட்ஸ் அவார்ட்ஸ் பிரிவின் கீழ், ஸ்போர்ட்ஸ் ஐகான் விருது அந்நாட்டு அரசால் சுரேஷ் ரெய்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பிரேசில் கால்பந்து வீரர் ராபர்டோ கார்லோஸ், ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் அசஃபா பவல், இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா உட்பட 16 சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் ரெய்னா இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் நிகழ்த்திய சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment