மூக்கின் மீது உள்ள கரும்புள்ளிகளை அகற்ற உதவும் ஹோம் ரெமடி..!

by Column Editor

கரும்புள்ளிகளை நீக்க இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இந்த 5 வீட்டுக்குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள். அவை கரும்புள்ளிகளை விரைவாக அகற்றுவதோடு எந்த பக்க விளைவுகளும் இருக்காது.

முகத்தில் கரும்புள்ளிகள் இருப்பது சகஜம், ஆனால் அவை உங்கள் அழகைக் குறைப்பதுதான் பிரச்சனை. அத்தகைய சூழ்நிலையில், அதை அகற்ற நீங்கள் பல்வேறு வகையான ஸ்க்ரப்கள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றும் பொருட்களை பயன்படுத்துவிர்கள். ஆனால் பல சமயங்களில் அவை பலன் அளிப்பதில்லை. சில நேரங்களில் கெமிக்கல் தயாரிப்புகள் பக்க விளைவுகளையும் உண்டாக்கலாம்.

கரும்புள்ளிகளை நீக்க இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இந்த 5 வீட்டுக்குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள். அவை கரும்புள்ளிகளை விரைவாக அகற்றுவதோடு எந்த பக்க விளைவுகளும் இருக்காது. அவை என்னென்ன பார்க்கலாம்.

முல்தானி மிட்டி:

கரும்புள்ளிகளை நீக்க முல்தானி மிட்டி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு ஒரு ஸ்பூன் முல்தானி மிட்டி பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் சிறிது வேப்பம்பூ, எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து மென்மையான பேஸ்டாக உருவாக்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் 15 நிமிடம் காய விட்டு, பிறகு முகத்தை கழுவவும்.

கடல் உப்பு :

கடல் உப்பு மற்றும் தேன் கூட உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை விரைவில் நீக்க உதவும். இதற்கு கடல் உப்பில் சிறிது தேன் கலந்து கெட்டியான பேஸ்ட் செய்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 5 நிமிடம் அப்படியே வைக்கவும். பின்னர் சாதாரண நீரில் முகத்தை கழுவவும்.

மஞ்சள்:

மஞ்சளைக் கொண்டும் கரும்புள்ளிகளை நீக்கலாம். இதற்கு ஒரு ஸ்பூன் மஞ்சளை எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். பின் இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்கவும். லேசான கைகளால் மசாஜ் செய்து பின்னர் வெற்று நீரில் முகத்தை கழுவவும்.

எலுமிச்சை:

கரும்புள்ளிகளை நீக்க, ஒரு தேக்கரண்டி தேனை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும். பின்னர் இந்த பேஸ்ட்டை கரும்புள்ளி உள்ள பகுதியில் தடவி சுமார் 20 நிமிடங்கள் விடவும். அதன் பிறகு முகத்தை கழுவவும்.

Related Posts

Leave a Comment