கூந்தல் வறண்டு போகாமல் தடுக்க குறிப்புகள்…

by Column Editor

ஒரு அவகாடோ பழத்தை மேஷ் செய்து முட்டையுடன் செர்க்கவும். பின்னர் ஈரமான கூந்தலில் தடவி குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு மேல் ஊற விட்டு கழுவினால் மென்மையான கூந்தலை பெறலாம்.

– வெண்ணையை வரண்ட முடிகளில் மசாஜ் செய்யுங்கள், பின்னர் ஒரு அரை மணி நேரம் ஊற விடுங்கள். வழக்கம் போல் ஷாம்பூ செய்யுங்கள். பளபளப்பான கூந்தலை எளிதாக பெறலாம்.

– வறண்ட கூந்தலுக்கு முட்டை மாஸ்க்கும் சிறந்தது. முட்டையின் வெள்ளை கரு, ஆலிவ் ஆயில் சேர்த்து தலையில் கூந்தலில் அப்ளே செய்ய வேண்டும். பிறகு 15-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதைச் செய்து வந்தால் உங்கள் கூந்தல் பட்டு போல் அலைபாயும்.

– ஆலிவ் ஆயில் வறண்ட கூந்தலுக்கான மிகச் சிறந்த முறையாகும். 1/2 கப் ஆலிவ் எண்ணெயை இதமான சூட்டில் எடுத்துக்கொள்ளவும். வரண்ட உங்கள் கூந்தலில் தேய்க்கவும். பின்னர் கூந்தலை ஒரு பிளாஸ்டிக் பையைக் கொண்டு கவர் செய்யவும். 45 நிமிடங்களுக்கு பின்னர் ஷாம்பூ செய்தால் மென்மையான பளபளப்பான கூந்தலை பெறலாம்.

– உங்கள் வறண்ட கூந்தல் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர கற்றாழை ஜெல் பெரிதும் பயன்படுகிறது. கற்றாழை ஜெல்லை மயிர்க்கால்களில் படும் படி தேய்க்கும் போது அது முடியின் வேர்க்கால்களை க்குள் நுழைந்து கூந்தல் வறண்டு போவதை தடுக்கிறது. கற்றாழை ஜெல்லை தடவிய பிறகு ஒரு ஒரு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு அலசிக் கொள்ளுங்கள்.

Related Posts

Leave a Comment