போட்டியாளர்களின் மீது கோபமடைந்த சிம்பு!

by Lifestyle Editor

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. சிம்பு தொகுத்து வழங்கிய பின் டிஆர்பி எகிறுகிறது. சிம்பு ரசிகர்களும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி, அபிநய், சுஜா வருணி, ஷாரிக், வனிதா விஜயகுமார் ஆகியோர் வெளியேறியுள்ளனர். ‘ இவர்களில் சுரேஷ் சக்ரவர்த்தி மட்டும் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே அனுப்பப்பட்டுள்ளார்.

மேலும், இந்த வாரம் ஒரு வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக லாஸ்லியா உள்ளே செல்ல இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனிடையே, இந்த வாரம் வெளியேறும் நபரில் சுருதி இடம்பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இன்றைக்கான முதல் ப்ரோமோவில் பேசிய சிம்பு, இவங்கள ஜாலியா விளையாட சொன்னா? விளையாட்டையே ஜாலியா எடுத்துக்குறாங்க…

இந்த விளையாட்டு வேலைக்காவாது.. நம்ம விளையாட்டை ஆரம்பிக்கலாமா? என போட்டியாளர்கள் மீது சற்று கோவத்துடன் பேசிய ப்ரோமோ வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment