உக்ரைன் மோதல்: குடியேறிய உக்ரேனியர்களின் உறவினர்கள் பிரித்தானியா வர அனுமதி!

by Column Editor

பிரித்தானியாவில் குடியேறிய உக்ரேனியர்களின் உறவினர்கள் பிரித்தானியா வர வந்தால், அவர்களை சேர்த்துக்கொள்ள முடியும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

உக்ரேனிய கதீட்ரல் சபையில் பேசிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், ‘உக்ரேனிய கதீட்ரல் சபையில் பேசிய அவர், ‘உக்ரைனின் தேவை நேரத்தில் பிரித்தானியா எங்கள் முதுகைத் திருப்பாது.

உக்ரைனில் நடந்த மோதலைப் போல நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான வேறுபாட்டை இவ்வளவு தெளிவாக பார்த்ததில்லை’ என கூறினார்.

பின்னர் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், நாட்டிற்கு மேலும் 40 மில்லியன் பவுண்டுகளை மனிதாபிமான உதவியை அறிவித்தார்.

நடந்து வரும் ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில் பிரித்தானியாவில் புகலிடம் தேடும் உக்ரேனியர்களுக்கு விசா விதிகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசாங்கம் எதிர்கொள்கிறது.

சமீபத்திய அறிவிப்புக்கு முன், ஏற்கனவே பிரித்தானியாவில் உள்ளவர்களை சார்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட உக்ரேனியர்களுக்கு மட்டுமே நுழைவு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

Related Posts

Leave a Comment