உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நேட்டோவை வலுவடையவே செய்யும்: பிரதமர் பொரிஸ்!

by Column Editor

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, நேட்டோவை வலுவிழக்கச் செய்வதற்குப் பதிலாக, வலுவடையவே செய்யும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

வருடாந்த பாதுகாப்பு மாநாட்டிற்காக உலகத் தலைவர்கள் சந்திக்கும் முனிச்சில் இருந்து பிரதமர் உரையாற்றினார். இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

‘1945ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை ரஷ்யா திட்டமிட்டு வருவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்துவதற்கான அனைத்து அறிகுறிகளும் உள்ளன. இதற்கான திட்டம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

உக்ரைன் தலைநகர் கியேவை சுற்றி வளைக்கும் படையெடுப்பை ரஷ்யா தொடங்க உள்ளதாக உளவுத்துறை தெரிவிக்கிறது.

எந்தவொரு மோதலும் இரத்தம் தோய்ந்த மற்றும் நீடித்ததாக இருக்கும். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இது பற்றி நியாயமற்ற முறையில் சிந்திக்கிறார் மற்றும் எதிர்வரும் பேரழிவைப் அவர் எண்ணிப் பார்க்கவில்லை.

பவுண்டுகள் மற்றும் டொலர்களில் வர்த்தகம் செய்வதை நிறுத்துவது உட்பட, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ரஷ்யாவிற்கு எதிராக முன்னர் பரிந்துரைக்கப்பட்டதை விட கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். இந்த நடவடிக்கையால் ரஷ்யா மிகவும் கடுமையாக பாதிக்கப்படும்

அதேவேளை, உக்ரைன் மீதான படையெடுப்பு, நேட்டோவை வலுவிழக்கச் செய்வதற்குப் பதிலாக, வலுவடைய செய்யும்.

புடின் இதன் விளைவாக நேட்டோவைப் கட்டுப்படுத்தப் பெறப் போகிறார் என்று நினைத்தால், அது முற்றிலும் தவறு. அவர் மேலும் நேட்டோ வளர வைக்கப் போகிறார்’ என கூறினார்.

ரஷ்யா மற்றும் அண்டை நாடான பெலாரஸ் ஆகிய இரு நாடுகளிலும் 169,000 முதல் 190,000 ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனின் எல்லையில் நிறுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க அரசாங்கத்தின் சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த எண்ணிக்கையில் கிழக்கு உக்ரைனில் உள்ள கிளர்ச்சியாளர்களும் அடங்குவர்.

உக்ரைன் மீது படையெடுக்கும் எந்த திட்டமும் இல்லையென ரஷ்யா கூறியுள்ளது. எனினும், ரஷ்யா, உக்ரைன் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

Related Posts

Leave a Comment