கொரோனா தொற்றில் இருந்து 10,001 பேர் குணமடைவு!

by Column Editor

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 10,001 பேர் குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 7 ஆயிரத்து 119 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 36 ஆயிரத்து 837 ஆக பதிவாகியுள்ளது.

அதேநேரம், நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 994ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment