சாம்பார் அடிக்கடி சாப்பிட்டிருப்பீங்க.. அரைச்சுவிட்ட சாம்பார் டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..? ரெசிபி இதோ…

by Column Editor

இது பாரம்பரிய வழக்கப்படி கையிலேயே மசாலாக்களை இடித்து , அரைத்து சமைப்பதால் இப்படி அழைப்பதுண்டு.

இதை அரைச்சு விட்ட சாம்பார் அல்லது இடிச்ச சாம்பார் என்றும் கூறுவார்கள். இது பாரம்பரிய வழக்கப்படி கையிலேயே மசாலாக்களை இடித்து , அரைத்து சமைப்பதால் இப்படி அழைப்பதுண்டு. சோறு, இட்லி, தோசை போன்று உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். நீங்களும் சமைத்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 1/3 கப்

புளி – எலுமிச்சை அளவு

சாம்பர் வெங்காயம் – 10 – 12

காய்கறிகள் – உங்கள் விருப்பம் (முருங்கை,கத்தரிக்காய், கேரட், பீன்ஸ்…)

மஞ்சள் பொடி – 1/4 tps

உப்பு – தேவையான அளவு

வறுக்க தேவையான பொருட்கள்:

தனியா – 1 tps

கடலை பருப்பு – 2 tps

காய்ந்த மிளகாய் – 4

வெந்தையம் – 1/8 tps

துருவிய தேங்காய் – 1 tps

தாளிக்க தேவையான பொருட்கள்:

எண்ணெய் அல்லது நெய் – 1 tps

கடுகு – 1/4 tps

வெந்தையம் – 1/8 tps

பெருங்காயப் பொடி – ஒரு சிட்டிகை

கருவேப்பிலை – 5 இலைகள்

செய்முறை:

முதலில் புளியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வையுங்கள். பின் புளிக்கரைசலை தனியாக பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின் குக்கரில் துவரம் பருப்பு மைய மசியுமாறு 5 விசில் வரை விட்டு வேக வைக்கவும்.

இதற்கிடையில் கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டிவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும். சூடு ஆறியதும் மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.

சமையலுக்கு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகை தாளிக்கவும். அடுத்ததாக வெந்தையம் , பெருங்காயப் பொடி, கருவேப்பிலை சேர்க்கவும்.

அடுத்ததாக தோல் உறித்த சாம்பார் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக காய்கறிகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

பின் புளிக் கரைசல், மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்க்கவும். அதில் காய்கறிகள் வேகும் வரைக் கொதிக்க விடவும்.

காய்கறிகள் வெந்ததும், வேகவைத்த துவரம் பருப்பு, மிக்ஸியில் அரைத்த பொடி ஆகியவற்றை சேர்த்து நன்குக் கலக்கி விடவும். அதோடு ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.

சிறு தீவில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். கொஞ்சம் கெட்டியான பதம் வந்ததும் சாம்பாரை இறக்கி விடவும். சாம்பார் அதிக கட்டியாகவும் இருக்கக் கூடாது.

தற்போது அருசுவையான அரைச்சு விட்ட சாம்பார் ரெடி.

Related Posts

Leave a Comment