சீரியலை விட்டு பாதியில் போனது வீண் போகவில்லை… பாரதி கண்ணம்மா அகிலன் ஹீரோவானார்!

by Column Editor

பாரதி கண்ணம்மா அகிலன் முதல் முறையாக தான் ஹீரோவாக களமிறங்க போகும் தகவலை சோஷியல் மீடியா மூலம் தற்போது அறிவித்து இருக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் பல முன்னணி சேனல்களில் தமிழ் திரைப்படங்களின் பெயர்களை கொண்டே பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அவற்றால் பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து ஹிட் லிஸ்ட்டிலும் சேர்ந்துள்ளன. இந்நிலையில் ரசிகர்களின் அபிமானம் பெற்ற விஜய் டிவி-யில் திரைப்படங்களின் பெயர்களை கொண்ட பல சீரியல்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று உள்ளன. அந்த வகையில் ஸ்டார் விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலில் பாரதியாக நடிகர் அருண் பிரசாத் நடித்து வரும் நிலையில்,கண்ணம்மாவாகநடிகை ரோஷினி ஹரிபிரியன் தாஸ் நடித்ததார். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் அவர் சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து தற்போது இந்த சீரியலில் கண்ணம்மாவாக வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார். எனினும் ரோஷினி கண்ணம்மாவாக நடித்த போது சீரியலுக்கு கிடைத்த வரவேற்பு சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து நடிகை ரோஷினி ஹரிபிரியன் விலகுவதற்கு முன்பே முக்கிய ரோலில் நடித்து வந்த நடிகர் ஒருவர் விலகியது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். பாரதியின் தம்பி கேரக்டரான அகில் ரோலில் சிறப்பாக நடித்து வந்தவர் நடிகர் அகிலன். தனது இயல்பான நடிப்பு மற்றும் ஸ்டைலான தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்த அகிலன் திடீரென சீரியலை விட்டு விலகியது அவரது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது. ஆனால் தொடர்ந்து வரும் வெள்ளித்திரை வாய்ப்புகள் காரணமாகவே சீரியலை விட்டு வேறு வழியின்றி விலகுவதாக அப்போது அறிவித்து ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார் நடிகர் அகிலன்.

சின்னதிரையை விட்டு விலகிய அகிலன்வெள்ளித்திரையில் சில படங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். மாடலிங், ஷார்ட் ஃபிலிம் துறையில் கால் பதித்த போது கிடைத்த சீரியல் வாய்ப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்த அகிலன் சினிமாவில் நுழைந்து சாதிக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டவர். சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். விரைவில் வெளியாக உள்ள பகீரா, பீட்சா 3 உள்ளிட்டவற்றில் நடித்துள்ளார்.

இதனிடையே முதல் முறையாக தான் ஹீரோவாக களமிறங்க போகும் தகவலை சோஷியல் மீடியா மூலம் தற்போது அறிவித்து இருக்கிறார் நடிகர் அகிலன். இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டுள்ள தகவலில் லீட் ரோலில் நடிக்க தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறி சில ஃபோட்டோக்களை ஷேர் செய்து இருக்கிறார். மேலும் தனது புதிய படத்தின் தயாரிப்பாளர் ரவிசங்கர், டைரக்டர் பானுசங்கர், இசையமைப்பாளர் மணி சர்மா, ஒளிப்பதிவு இயக்குனர் ரமேஷ் என்ற கூடுதல் தகவலையும் ஷேர் செய்துள்ளார். இதை அடுத்து ஹீரோவாக நடிக்க உள்ள நடிகர் அகிலனுக்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment