கொரோனா தொற்றில் இருந்து மேலும் 11 ஆயிரத்து 538 பேர் குணமடைவு

by Column Editor

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 11 ஆயிரத்து 538 பேர் குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 93 ஆயிரத்து 602 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் 6 இலட்சத்து 21 ஆயிரத்து 985 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 15 ஆயிரத்து 656 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment