பிராடுல நெம்பர் ஒன் அவன்… ஷாரிக்கை வம்புழுத்த வனிதா !

by Column Editor

ஷாரிக் சரியாக விளையாடவில்லை என்று வனிதா குற்றச்சாட்டும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 10வது நாளாக விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் தற்போது போலீஸ் மற்றும் திருடன் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் ஹவுஸ்மேட்டுகள் இரு பிரிவுகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். அப்போது ஹவுஸ்மேட்டுகளுடன் பிரச்சனை ஏற்படுகிறது.

இந்நிலையில் இன்றைய தினமும் அந்த டாஸ்க் தொடர்கிறது. இதில் ஹவுஸ்மேட்டுகளுடன் சண்டை ஏற்படுகிறது. அப்போது பேசும் வனிதா, நேற்றைக்கு முழுவதும் கோல்மால் கேம்தான் விளையாடினார்கள். இந்த இரண்டு நாட்களாக ஷாரிக் சுத்தமாக ஏமாற்றிவிட்டான். மீண்டும் அவனை திருடானா வைத்துக்கிட்டு ஒன்றும் செய்யமுடியாது. திரும்பவும் போலீசோடதான் சேருவான். அதனால் இரவு முழுக்க அவனை பாதாள சிறையில் தள்ளுங்க என்று பிக்பாஸிடமே சொல்லிட்டேன்.

டீம்முக்கு ஒத்துழைப்பு கொடுக்காமா சும்மா எல்லாரையும் சாகடிக்கிறான். இங்கு பாலாஜியும், ஷாருக்கும் தான் இருந்தாங்க. அவங்க இரண்டு பேருமே ஏமாற்றுக்கிறார்கள் என்று வனிதா சொல்கிறார். அப்போ ஷாரிக் சூப்பர் பிளேயர் என்று வைத்துக்கொள்ளலாமா என்று அனிதா சம்பத் கேட்க, அதற்கு அவன் செம பிராடு என்று சொல்லும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment