தங்கம் விலை அதிரடியாக உயர்வு.. சவரனுக்கு ரூ. 40 அதிகரிப்பு…

by Column Editor

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.36,296க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் வாங்குவதில் எப்போதுமே பெண்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவர். ஆபரணங்கள் அணிந்து பார்ப்பதில் மகிழ்ச்சி என்றாலும், தங்கத்தில் முதலீடு என்பது பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் தரப்பிலும் சிறந்த சேமிப்பாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை சொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. ஏதோ ஒரு நாள் தங்கத்தின் விலை குறையும்போது , அடுத்த நாளே பெரிய அளவில் விலை அதிகரித்து விடுகிறது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்திருக்கிறது.

சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் 4,532 ரூபாயாக இருந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ 36,256 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ரூ. 4,537க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 36,296 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், சென்னையில் நேற்று ரூ65.30 க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி விலை இன்று 20 காசுகள் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 65 .10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 65,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment