பிக்பாஸ் வீட்டில் நாரதர் கலகமா ?.. தாமரை கேள்விக்கு பதிலளித்த சுரேஷ் சக்ரவர்த்தி !

by Column Editor

நாரதர் கலகம் செய்வதாக சுரேஷ் சக்ரவர்த்தி மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். ஹவுஸ்மேட்டுகள் இருபிரிவுகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். அதில் நட்சத்திரமாக மாறும் நபரிடம் பத்திரிக்கையாளராக இருப்பவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த ஏற்கனவே வனிதா, ஜூலி உள்ளிட்டோரிடம் கேள்வி எழுப்பி பிரச்சனையாகியுள்ளது.

அந்த வரிசையில் தற்போது சுரேஷ் சக்ரவர்த்தி இன்று நட்சத்திரமாக களமிறங்கியுள்ளது. அவரிடம் தாமரைச்செல்வி கேள்வி கேட்கும் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி நீங்க கலகம் பண்ணது என்ன நன்மையில் முடித்தது என்று தாமரைச்செல்வி கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி, கலகம் செய்வது நான் இல்லை. அதை சாரே சொல்லிவிட்டார் என்று கூறுகிறார்.

இந்த பிக்பாஸ் கேமிலும் புரியாத மாதிரி நடித்து மேல போகணும் வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இப்ப கேட்ட கேள்வியை கவனமாக கேட்கவேண்டும். கலகம் என்பதை நான் செய்யல, நாரதர் என்று சொன்னது அவரை. அதை காதில் கேட்டுட்டு, இருப்பதிலேயே பெரிய ஆள் மீது கை வைப்பதை நான் கண்டிக்கிறேன் என்று சுரேஷ் சக்ரவர்த்தி கூறுகிறார். சுரேஷ் சக்ரவர்த்தி பேச்சை கேட்டு அதிர்ச்சி உறைந்த தாமரை, அமைதியாக கேட்டுக்கொள்ளும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. கடந்த சீசன் போன்று இல்லாமல் அமைதியாக இருப்பது யுக்தியா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment