கொரோனா தொற்றில் இருந்து மேலும் 471 பேர் குணமடைவு

by Column Editor

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 471 பேர் குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 79 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 12 ஆயிரத்து 322 அதிகரித்துள்ளது.

மேலும் இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 473 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment