பாகிஸ்தானுக்கு மிளகாயை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை

by Lifestyle Editor

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகாயில் அஃப்லாடாக்சின் Aflatoxin கலந்துள்ளமையினால் மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் 25 மிளகாய் கொள்கலன்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்கள் குழுவொன்று இந்த மிளகாயை இறக்குமதி செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, உணவின் தரம் தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்கு சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தொலைபேசி; 0112 112 718 எனும் விசேட இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment