அடடா முதல் வாரத்திலேயே பிக்பாஸ் அல்டிமேட்டில் இவர் வெளியேறுகிறாரா?

by Column Editor

24 மணி நேரமும் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் ஆனது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 14 போட்டியாளர்கள் நுழைந்த நிலையில், யாருமே ரசிகர்களுக்கு பிடித்தமான போட்டியாளர்கள் இல்லை என கூறி வருகின்றனர்.

நாமினேஷனில் இந்த வாரம் சிக்கியுள்ள 8 போட்டியாளர்களில் டேஞ்சர் ஜோனில் இருக்கும் அந்த மூவர் யார் என்பது குறித்து இங்கே பார்ப்போம். இந்த நிலையில் யார் இந்த வாரம் வெளியேறப்போகிறார்கள் என எதிர்ப்பார்த்த நிலையில், நிரூப் முதல் இடத்திலும், அனிதா சம்பத் இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் சுருதி உள்ளார்.

நான்காம் இடத்தில் சினேகனும் ஐந்தாவது இடத்தில் அபிநய்யும் சேஃப் ஜோனில் உள்ளனர். ஆனால், அபிநய்க்கும் டேஞ்சர் ஜோனில் இருக்கும் போட்டியாளர்களுக்கும் சிறிய இடைவெளி மட்டும் தான் உள்ளது என்பதால் வரும் நாட்களில் ஓட்டுக்கள் எப்படி மாறும் என்பது தெரியவில்லை.

இவர்களையடுத்து, சுரேஷ் சக்கரவர்த்தி 8.27% வாக்குகளுடன் உள்ளார். வனிதா விஜயகுமார் 7.51% வாக்குகளுடன் டேஞ்சர் ஜோனில் உள்ளார். கடைசி இடத்தில் ஜூலி 6.82% வாக்குகளுடன் அடிமட்டத்தில் உள்ளார்.

இதனால், முதல் வாரமே ஜூலி வெளியேறலாம் எனக்கூறப்படுகிறது. என்னதான் ஜூலி மாறிவிட்டேன் என மேக்கப் எல்லாம் போட்டு பில்ட்ஃப் எல்லாம் காட்டினாலும், அவரை ரசிகர்கள் வெறுத்த வண்ணமே தான் உள்ளது.

Related Posts

Leave a Comment