திடீர் என்ட்ரி கொடுக்கும் சீரியல் பிரபலங்கள்.. குஷியான போட்டியாளர்கள் !

by Column Editor

பிக்பாஸ் வீட்டிற்கு சீரியல்கள் பிரபலங்கள் என்ட்ரியாவதால் போட்டியாளர்கள் குஷியாகியுள்ளனர்.

இறுதிப்போட்டியை நோக்கி சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே ராஜு, பிரியங்கா, பவானி, நிரூப் மற்றும் அமீர் ஆகியோர் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். அதோடு நிக்ழ்ச்சியை சிறப்பிக்க பிக்பாஸ் விட்டு வெளியேறிய அபினய், சிபி, ஸ்ருதி, தாமரை உள்ளிட்டோர் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினத்தின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பொங்கலை பண்டிகையையொட்டி பிக்பாஸ் வீட்டிற்கு விஜய் டிவியின் பிரபல சீரியலான ஈரமான ரோஜாவே மற்றும் செந்தூரப்பூவே சீரியல் பிரபலங்கள் என்ட்ரி கொடுக்கின்றனர். அதில் ஈரமான ரோஜா சீரியலிருந்து ஹீரோ மற்றும் ஹீரோயினும், செந்தூர பூவே சீரியலில் இருந்து பிரபல நடிகர் ரஞ்சித் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் வருகை தருகின்றனர்.

அப்போது ரஞ்சித்தை பார்த்து எனக்கு கையை காட்டவில்லை அண்ணா என்று ராஜூ கேட்க, அனைவரும் சிரிக்கின்றனர். போட்டியாளர்களிடம் பேசும் ரஞ்சித், வரும்போது மூளை நம்பிதான் வருவீங்க. போகும் போது இதயத்தோடு இணைந்து செல்வீர்கள். அது ரொம்ப பிடித்திருக்கிறது என்று கூறுகிறார். இதைத்தொடர்ந்து சீரியல் பிரபலங்கள், போட்டியாளர்களுக்கு வாழ்த்து சொல்லி செல்கின்றனர்.

Related Posts

Leave a Comment