5 பேரும் தகுதியானதற்கு இதுதான் காரணமாம்.. சுவாரஸ்யமாக தகவல்களை கூறும் போட்டியாளர்கள் !

by Column Editor

பிக்பாஸ் வீட்டில் தேர்வான 5 இறுதி போட்டியாளருக்கான தகுதிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இன்றைக்கு போட்டியாளர்கள் ஒரு நாள் பிக்பாஸ் ஆகவேண்டும் என அறிவிக்கப்படுகிறது. பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒரு நபரை பிக்பாஸ் ஆட்கொண்டால் அந்த நபராக எவ்வாறு இருப்பார் என்றும், அப்படி பிக்பாஸாக மாறும் நபரின் கட்டுப்பாட்டில் இந்த வீடு முழுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதன்படி அமீர் ஒரு நாள் பிக்பாஸாக மாறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், பிக்பாஸ் வீட்டில் முதல்முறையாக போட்டியாளர் ஒருவர் இறுதிப்போட்டிக்கு தகுதியானதற்கு எது காரணம் என்று சொல்லுங்க என அமீர் கேட்கிறார். இந்த வீட்டில் எல்லாரையும் சந்தோஷமாக வைத்திருக்கிறார் என்றால் அது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது என்று பிரியங்கா சொல்கிறார்.

இதையடுத்து பேசும் நிரூப், மக்களுக்கு எப்போது ஜாலியாக நபரை பிடிக்கும். அந்த வகையில் பிரியங்கா எப்போதும் ஜாலியாக இருப்பவர். ஆனால் பிக்பாஸ் வீட்டில் எங்களுடன் கொஞ்சம் கஷ்டப்படுத்தும் விதமாக நடந்துக்கொண்டாலும் வெளியே வேற மாதிரி இருக்கிறார் என்கிறார். கடைசியாக பேசும் ராஜூ, மக்களுக்கு நம்மை பிடித்திருக்கிறது. அதனால் தான் நாம் அனைவரும் இங்கே இருக்கும் என்று ரொம்பவே கூலாக பதிலளிக்கிறார்.

Related Posts

Leave a Comment