தகுதியில்லாத நபர் ராஜூ ?… நிரூப் வைத்த குற்றச்சாட்டு !

by Lifestyle Editor

பிக்பாஸ் வீட்டில் தகுதியில்லாத நபராக ராஜூவை பார்க்கிறேன் என்று நிரூப் சொல்லும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் போட்டியாளர்களிடம் கமல் பேசி வருகிறார். அப்படி பிரியங்காவிடம் கமல் சில கேள்விகளை எழுப்பும் முதல் ப்ரோமோ வெளியானது. அதில் அன்பை பயன்படுத்தி வெற்றிப்பெற பிரியங்கா முயற்சி செய்வதாக கமல் கூறியிருந்தார்.

இதையடுத்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டில் தகுதியில்லாத நபர் என்ற பட்டத்தை ராஜூவிடம் கொடுக்கிறேன் என்று நிரூப் குற்றச்சாட்டுகிறார். ஏன் அவருக்கு அந்த பட்டத்தை கொடுத்தேன் என்றால், இந்த வீட்டில் எல்லோரையும் சிரிக்க வைக்கிறார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் விளையாடும் வெறியை நான் பார்க்கவில்லை.

இவருக்கு பதிலாக நல்ல விளையாடும் நபராக நான் பார்த்தது, அபிஷேக்தான். அவரைதான் நான் மிகவும் கடினமான போட்டியாளராக பார்த்தேன். அவரின் யுக்தி, பயன்படுத்தும் வார்த்தை ஆகியவை வைத்துதான் அப்படி சொல்கிறேன் என்று நிரூப் சொல்ல, அவரும் நல்ல ஜோக்கலெல்லாம் பண்ணுவாரே என கமல் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment