ஐபிஎல் ஏலம் எப்போது தெரியுமா? – வெளியான முக்கிய தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி

by Column Editor

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும் தேதி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அகமதாபாத், லக்னோ அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ள நிலையில் வீரர்களுக்கான மெகா ஏலமும் நடைபெறவுள்ளது.

இந்த மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், கொரோனா பரவல் அதிகரிக்காமல் இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவில் வைத்து ஏலம் நடைபெறும், இல்லையென்றால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏலத்தில் பங்கேற்கும் 10 அணிகளும் யார் யாரை தேர்வு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Posts

Leave a Comment