கொவிட் தொற்றினால் 92இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

by Column Editor

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 92இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 92இலட்சத்து எட்டாயிரத்து 219பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக ஒரு இலட்சத்து 41ஆயிரத்து 395பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 15இலட்சத்து 74ஆயிரத்து 349பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 19பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 74இலட்சத்து 92ஆயிரத்து 475பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Posts

Leave a Comment