நடிகை கோழிக்கோடு சாரதா மாரடைப்பால் மரணம்

by Column Editor

பழம்பெரும் நடிகை கோழிக்கோடு சாரதா இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். மூச்சுத்திணறலால் கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வெள்ளிபரம்பை சேர்த்தவர் சாரதா. நாடக நடிகராக நடித்து வந்த இவர் 1979 ஆம் ஆண்டு அங்காக்குறி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். 1980களில் இவருக்கு பட வாய்புகள் குவிந்தன.
ஏராளமான படங்களில் நடித்து அவர் 80க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த கோழிக்கோடு சாரதா திரையுலகில் வாய்ப்புகள் குறைந்த காலங்களில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.
84 வயதான சாரதாவுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இதயநோய் சிகிச்சை பெற்று வந்த சாரதாவுக்கு நேற்று இரவு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவரை கோழிக்கோட்டில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சாரதாவுக்கு இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். கோழிக்கோடு சாரதாவின் மறைவுக்கு கேரளா திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment