பொங்கல் ரிலீஸில் இருந்து ஒதுங்கும் சுந்தர் சி யின் அரண்மனை 4..

by Lifestyle Editor

தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. 2014ல் துவங்கிய அரண்மனை வரிசையின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது சுந்தர் சி லைகா தயாரிப்பில் அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இப்போது சுந்தர் சி யே கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யலாம் என படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் இப்போது பொங்கலுக்கு அதிக படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆவதாலும், படத்தின் வி எஃப் எக்ஸ் பணிகள் நிறைவடையாத காரணத்தாலும், இப்போது ரிலீஸை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Related Posts

Leave a Comment