ரவையில் பூரி!

by Editor News

ஆம் உங்கள் வீட்டில் ரவை இருந்தால் போதும், அருமையான சுவையில் பூரி தயார். இதற்கு சைடு டிஷ் ஆக உருளைக்கிழங்கு குருமா சூப்பராக இருக்கும். இந்த மொறு மொறு ரவை பூரி உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

ரவையில் பூரி செய்வதற்கு தேவையான பொருட்கள்:

வறுக்காத ரவை – 1/4 கிலோ
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

ரவை பூரி செய்வதற்கு முதலில் எடுத்து வைத்த ரவையை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த ரவையை போட்டு அதில் சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கிளறி விடுங்கள். இப்போது அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். பிறகு அதை ஒரு மூடியால் மூடி வைத்து பத்து நிமிடம் ஊற வையுங்கள்.

பத்து நிமிடம் கழித்து பிசைந்த மாவை மீண்டும் ஒருமுறை பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக அதை உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பின் அந்த உருண்டையில் ஒன்றை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து பூரி அளவிற்கு தேய்த்து எடுக்கவும். இப்படியே எல்லா மாவையும் தேய்த்து எடுக்கவும்.

பின் ஒரு கடையை அடுப்பில் வைத்து பூரி பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் தேய்த்து வைத்துள்ள மாவை ஒவ்வொன்றாக சுட்டு எடுங்கள். அவ்வளவு தான் சுவையான மொறு மொறுப்பான ரவா பூரி ரெடி!!

Related Posts

Leave a Comment