மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவு : தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

by Lifestyle Editor

நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாட்டின் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று ஆர்வமுடன் வாக்களித்திருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மாலை வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில், நேற்றிரவு 8 மணி நிலவரப்படி 61.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, 13 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் மொத்தம் 64.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய ,அசாமில் 81.61 சதவீதமும், பீகாரில் 58.18 சதவீதமும், சத்தீஸ்கரில் 71.06 சதவீதமும், பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment