கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை …

by Lifestyle Editor

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு இல்லாத பாதிப்பு நேற்று ஒரே நாளில் பதிவாகியிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு 1500 என்று இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து மாநில சுகாதார துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று (ஏப்ரல் 7 ) ஆலோசனை நடத்துகிறார். குறிப்பாக காணொளி முறையில் அமைச்சர்கள் சுகாதாரத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்படும் என்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Related Posts

Leave a Comment