புதிதாக 3 மாவட்டங்கள்

by Lankan Editor

இராஜஸ்தான் மாநிலத்தில் மல்புரா, சுஜான்கர், கச்மன் நகரம் ஆகிய மூன்று புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் 17 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போது மல்புரா, சுஜான்கர், கச்மன் நகரம் ஆகிய மூன்று மாவட்டங்களை உருவாக்கியதன் மூலம் மாநிலத்தில் மொத்தம் 53 மாவட்டங்கள் உள்ளன.

மாநில அரசின் உயர்நிலைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும் மூன்று புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் உயர்நிலைக்குழுவின் பரிந்துரைக்குப் பின்னர் மாவட்டங்கள் வரையறுக்கப்பட்டு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இராஜஸ்தான முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment