இமாச்சலபிரதேசத்தின் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்பு

by Lifestyle Editor

இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார். துணை முதலமைச்சராக முகேஷ் அக்னிஹோத்ரி பதவியேற்றுக்கொண்டார்.

இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியதையடுத்து அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைகிறது. இந்நிலையில் முதல்வருக்கான போட்டியில் அந்த கட்சியின் பிரதிபா சிங், சுக்விந்தர் சிங் சுகு மற்றும் முகேஷ் அக்னிஹோத்ரி ஆகிய 3 பெரிய தலைவர்கள் இருப்பதால் யாரை தேர்வு செய்வது என்பது காங்கிரஸ் தலைமைக்கு பெரிய சவாலாக இருந்தது. இந்நிலையில் நேற்று, இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகுவையும், துணை முதல்வர் பதவிக்கு முகேஷ் அக்னிஹோத்ரியையும் காங்கிரஸ் தலைமை அறிவித்தது.

இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். துணை முதலமைச்சராக முகேஷ் அக்னிஹோத்ரி பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Posts

Leave a Comment