ராமர் கோவில் கும்பாபிஷேக விழா! 22-ல் அரசு பொது விடுமுறை.! புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு.!!!

by Lifestyle Editor

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, வருகிற 22 ஆம் தேதி புதுச்சேரியில் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என மொத்தம் 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் மூலவர் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ஜனவரி 22-ம் தேதி புதுச்சேரியில் அரசு பொது விடுமுறை என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment