மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டம் இன்று!

by Lifestyle Editor

இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் இடம்பெறும் நிலையில் குஜராத் மாநிலத்தில் மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றது.

மாநிலத்தின் 26 தொகுதிகளில் 25 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன.

அஹமதாபாத்திலுள்ள 16 பாடசாலைகளுக்கு மின்னஞ்சலினூடாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 11 பாடலைகளில் வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் 13ஆம் திகதி 96 தொகுதிகளிலும் அதனைத் தொடர்ந்து 20 ஆம் திகதியன்று 49 தொகுதிகளிலும் 25 ஆம் திகதியன்று 57 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment