பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சுக்கு அருகே வெடித்த போராட்டம்!

by Lifestyle Editor

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக காஸா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் பிரித்தானிய அரசு, இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை செய்து வருவதைக் கண்டித்து பிரித்தானியாவில் உள்ள பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றையதினம் லண்டனில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு அருகே போராட்டத்தினை முன்னெடுத்த பாலஸ்தீன ஆதரவாளர்கள், அமைச்சக கட்டிடத்தின் சுவரில் சிவப்பு நிற தீந்தையை பூசியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஐவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment