முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நூல் இன்று வெளியீடு…

by Lifestyle Editor

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதிகள் தொடர்பாக இன்று நூல் ஒன்றை வெளியிடவுள்ளார்.

ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை வெளியேற்றும் சதி என்ற தலைப்பிலேயே இந்த நூல் வெளியிடப்படவுள்ளது.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது முதல், சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் தன்னை பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரமாக செயற்பட்டதாக அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த புத்தகத்தில் உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடு என்பது இலங்கை அரசியலின் ஒரு பகுதியாகிவிட்டதாகவும், இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் 60 வருடங்களில் இந்நிலை காணப்படவில்லை எனவும், கடந்த 2022 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சம்பவங்களால் நாட்டின் எதிர்காலத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts

Leave a Comment