மகா சிவராத்திரி: திருக்கேதீஸ்வர ஆலயத்தில் விசேட கலந்துரையாடல்!

by Lifestyle Editor

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வினை முன்னிட்டு முன் ஆயத்த நடவடிக்கை தொடர்பான இறுதி கலந்துரையாடல் நேற்று திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் பரந்தாமன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள், இராணுவம், பொலிஸ் உயர் அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது எதிர்வரும் 8 ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற உள்ள மகா சிவராத்திரி நிகழ்வு தொடர்பாகவும், முன்னெடுக்கப்பட வேண்டிய முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக போக்குவரத்து, சுகாதாரம், குடிநீர், உணவு தங்குமிட ஏற்பாடுகள், பாதுகாப்பு உள்ளடங்களாக முன்னெடுக்க வேண்டிய அவசிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

Related Posts

Leave a Comment