திருமந்திரம் – பாடல் 1783: ஏழாம் தந்திரம் – 8

by Lifestyle Editor

சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

கூடு முடல்பொரு ளாவிகுறிக் கொண்டு
நாடி யருள்வைத் தருண்ஞான சத்தியாற்
பாட லுடலினிற் பற்றற நீக்கியே
கூடிய தானவனாகக் குறிக் கொண்டே.

விளக்கம்:

உயிர்களின் உடல், அதற்குள் மறைந்து இருக்கின்ற பொருளாகிய இறைவன், அந்த இறைவனின் சிறு பகுதியாகிய ஆன்மா, ஆகிய மூன்றும் ஒன்றாக சேர்ந்து இருப்பதை உணர்ந்து கொள்வதையே குறிக்கோளாகக் கொண்டு, உயிர்கள் தம்மை தேடி வர வேண்டும் என்கின்ற மாபெரும் கருணையினால் தமது அருளை அவர்களுக்குள் வைத்து அருளுகின்றான் அறிவு வடிவாகிய இறைவன். அந்த இறைவனின் ஞான சக்தியானது இறைவனை அடைய வேண்டும் என்கிற விருப்பத்தால் எப்போதும் இறைவன் மேல் எண்ணத்தை வைத்துக் கொண்டு தமக்கான செயல்களை செய்கின்ற உயிர்களின் உடலில் சேர்ந்து இருக்கின்ற ஆசைகள் பற்றுக்கள் ஆகிய அனைத்தையும் முழுவதுமாக நீக்கி விட்டு, அந்த உயிர்களோடு ஒன்றாக சேர்ந்து இருந்து, அவர்கள் தாமே இறைவனாக இருக்கின்ற நிலையையே குறிக்கோளாக கொண்டு இருக்க வைக்கின்றான்.

Related Posts

Leave a Comment