திருமந்திரம் – பாடல் 1684: ஆறாம் தந்திரம் – 13.

by Lifestyle Editor

அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)

பஞ்சத் துரோகத் ததிபாதகர் தம்மைப்
பஞ்ச சமையத்தோர் வேந்த னருந்தெண்டம்
விஞ்சத்த வப்புவி வேறே விடாவிடிற்
பஞ்சத் துள்ளாகிப் புவியெங்கும் பாட்குமே.

விளக்கம்:

கொலை களவு கள் (மது) காமம் பொய் கூறல் ஆகிய ஐந்து வகையான மகா பாவங்களையும் ஒரு உண்மையான ஞானியைப் போல பொய்யான வேடம் அணிந்தவர்கள் தம்மை நம்புகிறவர்களை ஏமாற்றி துரோகம் செய்வது அந்த மகா பாவங்களுக்கும் மேலான பாதகர்களாக அவர்களை ஆக்குகின்றது. அப்படி ஐந்து வகையான மகா பாவங்களுக்கும் மேலான பாவங்களை செய்பவர்களை பார்த்து அவர்களைப் போலவே மற்றவர்களும் அந்த பாவங்களை கடை பிடித்து விடாத படி அந்த நாட்டை ஆளுகின்ற அரசன் அந்த பஞ்ச மகா துரோகிகளுக்கு மிகவும் கொடுமையான தண்டனையைக் கொடுத்து தங்களின் புண்ணியமான நாட்டை விட்டு அவர்களை விலக்கி வைத்து வேறு இடத்திற்கு போகும் படி கொண்டு சென்று விடாமல் இருந்தால் அவர்களின் புண்ணிய நாடு பஞ்சத்தில் அகப்பட்டுக் கொண்டு முழுவதும் பாழாக போய் விடும்.

Related Posts

Leave a Comment